மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடியை வழங்கிய மத்திய அரசு!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அப்போது அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 கோடி உதவித் தொகையை மத்திய அரசு இன்று செலுத்தியது.

Update: 2021-12-22 01:00 GMT

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அப்போது அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 கோடி உதவித் தொகையை மத்திய அரசு இன்று செலுத்தியது.

அதனையடுத்து முக்கிய மந்திரி கன்னிய சுமங்கலா திட்டத்தின் வாயிலாக பயன்பெறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி உதவித் தொகையை பிரதமர் மோடி வழங்கிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் உள்ள பெண்களின் வளர்ச்சிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடிமட்ட நிலையில் உள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1000 கோடி பணம் 16 லட்சம் பெண்கள் பலன் பெறுவார்கள்.

மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பெயரிலேயே வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக சொத்துரிமை இல்லாத பெண்களுக்கு இன்று அவர்கள் பெயரில் தனி வீடே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News