பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம்: முன்னோக்கி செல்லும் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 'பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம்.

Update: 2023-03-13 00:40 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரதமரின் 'கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம்' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் உரையாற்றினார். இதுவரை இந்திய அரசின் எந்தவொரு திட்டத்திலும் உள்ளடக்கப்படாத கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்காக புதிதாக அறிவிக்கப்பட்ட பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.


பிரதமரின் சிறப்பு உரையைத் தொடர்ந்து திட்டத்தின் கட்டமைப்பு, பயனாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் செயல்படுத்தல் குறித்த நான்கு அமர்வுகள் நடைபெற்றன. கட்டமைப்பு குழுவில் அந்தந்த துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கைவினைஞர்கள் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இ-வணிகத் தளங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இணைப்புக்கான சந்தைப்படுத்தல் ஆதரவு' குறித்த மூன்றாவது அமர்வு, ஜவுளி அமைச்சகத்தின் கைவினை மற்றும் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் திருமதி சுப்ராவால் நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட திட்டத்தில் வழங்கப்படும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான சந்தைப்படுத்தல் ஆதரவின் கட்டமைப்பில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.


கைவினைஞர்களுக்கான சந்தை வழிகளை மேம்படுத்துதல், பின்தங்கிய மற்றும் முன்னோக்கி இணைப்புகளை உருவாக்குதல், ஆகியவை குறித்த விவாதங்கள் நடைபெற்றன. நிறைவுக் கூட்டத்தில் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கங்கள் எவ்வாறு முடிவுகள் குறித்தான விவாதங்களுக்கு மதிப்பு சேர்க்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். பிற அமைச்சகம் மூலம் துறைகளில் இருக்கும் திட்டங்களுடன் பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News