மசூதி உள்ளே தொழுகை.. வெளியே விவசாயி போராட்டத்திற்கு சிங்காக மாறும் இஸ்லாமியர்கள்.!

மசூதி உள்ளே தொழுகை.. வெளியே விவசாயி போராட்டத்திற்கு சிங்காக மாறும் இஸ்லாமியர்கள்.!

Update: 2020-12-23 10:36 GMT

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லில் பஞ்சாப், மற்றும் அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு முழு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் என்று பாஜக குற்றம்சாட்டி வந்தது. அதே போன்று டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் போர்வையில் பல சமூக விரோதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் கலந்து கொண்டுள்ளனர் என வெளிப்படையாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்கள், வெளியில் வந்து ஒவ்வொருவராக சிங் போன்ற உடைகளை அணிந்து வருகின்றனர். இதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இது போன்றவர்கள்தான் விவசாயிகள் போராட்டத்தில் காணப்படுகின்றனர். இது போன்ற சமூக விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்து வந்தாலும் திருந்தியபாடில்லை. அதே போன்றுதான் தமிழகத்தில் உள்ள திமுகவும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

Similar News