அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை.!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2021-04-17 14:02 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை கடந்து செல்கிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களிடையே போதுமான கட்டுப்பாடுகள் இல்லாததும் தொற்று அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.


 



இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறித்து ஆலோசனை செய்வதற்காக அவசர ஆலோசனைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனையானது இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.




 


இந்த ஆலோசனையில் முக்கிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News