கேரளத்திற்காக 1 லட்சம் கோடி செலவழித்த மத்திய அரசு - பிரதமர் மோடி பெருமிதம்

கேரளாவின் உட்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-02 02:21 GMT

கேரளாவின் உட்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தவும் நவீன கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக கேரள மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். கொச்சினில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேரள பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார்.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கேரளாவில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் கேரளா கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நல திட்டங்களுக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி செலவழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நிகழ்ச்சி முன் முடிந்த பின்னர் காலடியில் ஆதிசங்கரர் அவதரித்த ஆதிசங்கர ஜென்ம பூமிக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.


மேலும் கொச்சி மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணி, எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகர், கொல்லம் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினர். மொத்தத்தில் 4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

Similar News