கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு: 12 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று (நவம்பர் 5) காலை சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் டேராடூன் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.

Update: 2021-11-05 06:25 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று (நவம்பர் 5) காலை சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் டேராடூன் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.


இதன் பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார். கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த சிலை மிகவும் சேதமடைந்தது. தற்போது இந்த சிலை புனரமைக்கப்பட்டுள்ளது.


மேலும், அங்கு பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Sourc, Image Courtesy: ANI

Tags:    

Similar News