புல்வாமா: பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் பறிமுதல் செய்த ராணுவம் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக, போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சமயங்களில் ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

Update: 2021-09-17 08:37 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக, போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சமயங்களில் ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டம், மெயின் சவுக் பகுதியில் போலீசார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதலை தொடர்ந்தனர். இதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் இன்று போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News