பிரதமர் புகழ்ந்த ‘ராகேஷ் நாய்’ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.. மரியதையுடன் அடக்கம் செய்த வீரர்கள்.!

பிரதமர் புகழ்ந்த ‘ராகேஷ் நாய்’ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.. மரியதையுடன் அடக்கம் செய்த வீரர்கள்.!

Update: 2020-12-03 10:17 GMT

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு நாய் பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார். தற்போது அந்த நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.


பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் ராகேஷ் என்ற ஒரு நாயைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அப்போது ஆயுதப்படையைச் சேர்ந்த வீரர்கள் சாலையோரத்தில் வசிக்கின்ற நாய்களையும் பாதுகாத்து பராமரிப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.


அவர் குறிப்பிட்டு பேசியிருந்த நாய் கடந்த செவ்வாய்கிழமை கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் இறந்து விட்டது. அந்த நாயை ஆயுதப்படையை சேர்ந்த வீரர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இதனை வீரர்கள் போட்டோ எடுத்து பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக ஆயுதப்படை அதிகாரி ஆசிஸ் உர் ரெஹ்மான் கூறியதாவது: பயிற்சி வீரர்கள் வழக்கமாக செல்லும் இடமாக ராகேஷின் டீ கடை இருந்தது.

அவர் ஒரு சாலையில் வசித்து வந்த நாயை பராமரித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ராகேஷ் அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் ஆதரவின்றி அந்த நாய் உணவின்றி தவித்து வந்தது. இதனை பார்த்த பயிற்சி வீரர்கள் அந்த நாய்க்கு டீக்கடைக்காரரின் பெயரையே வைத்து, ராகேஷ் என்று அழைத்து வந்தனர். அனைவரிடத்திலும் ராகேஷ் பிரியமாக பழகி வந்தார். தற்போது ராகேஷ் இறந்தது எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Similar News