ரூ.3,000 கோடி மதிப்பில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு.. நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி.!

ரூ.3,000 கோடி மதிப்பில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு.. நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி.!

Update: 2021-01-05 13:44 GMT

குழாய் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகின்ற திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாரே காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3,000 கோடி மதிப்பில் கொச்சி - மங்களூரு இடையே சுமார் 450 கி.மீ. வரையிலான குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை வினியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 450 கி.மீ தூரமுள்ள இயற்கை எரிவாயு குழாய்த் திட்டத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் பெருமைபடுகிறேன்.

இது இந்தியாவுக்கு குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரள மக்களுக்கு ஒரு முக்கியமான நாள். முந்தைய பல ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான காரணங்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், மெதுவாக முன்னேற்றமடைந்து வந்த இந்தியாவில், சமீபத்திய ஆண்டுகளில் அதன் வேகமும், வளர்ச்சியின் வாய்ப்புகளும் மிகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News