எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்களில் 4 முறை பணம் எடுத்தால் சேவைக்கட்டணம்.. நாளை முதல் அமல்.!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது.
இது பற்றி ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்பிஐ ஏ.டி.எம்.கள் அல்லது கிளைகளில் மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்கப்படும்.
5வது முறையாக பணம் எடுக்கும்போது சேவை கட்டணமாக 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.