மேற்கு வங்காளத்தில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

காற்று மாசுபடுவதாக கூறி மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை, சாத் பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்து.

Update: 2021-11-01 13:10 GMT

காற்று மாசுபடுவதாக கூறி மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை, சாத் பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்து.

இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனவும், பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். தீபாவளி விடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News