பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்ட வேண்டாம் ! எச்சரிக்கும் விஞ்ஞானி !

தேசிய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Update: 2021-09-13 13:14 GMT

தேசிய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, கொரோனா தொற்றின் நீண்ட நாள் பக்க விளைவுகளில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று தற்போதைய ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. பள்ளிகள் திறக்கும்போது பரவலான அணுகுமுறை தேவை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எண்ணிக்கையை பொறுத்து பள்ளிகளைத் திறப்பதா? வேண்டாமா? என்பதனை முடிவு செய்யலாம்.

மேலும், நோய்த்தொற்றின் காரணமாக விளங்குவது மக்கள் தொகை அடர்த்தி மற்றும் போக்குவரத்து புலம் பெயர்வது ஆகியவை அமைகிறது. 3வது அலை உருவாகினால் என்றாலும் அதன் தீவிரம் மற்றும் பரவல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடவே செய்யும். பலவீனமாக இருக்கும் இடங்களில் 3வது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிகளை திறப்பதில் அரசு கவனம் செலுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News