பயங்கரவாதத்தில் ஈடுபட, பல இளைஞர்களை மூளைச்சலவை செய்த இஸ்லாமிக் செமினெரி தலைவர் உட்பட 6 பேர் கைது.. NIA அதிரடி!

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் முயற்சிகள் நடத்தப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2021-07-13 00:57 GMT

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் முயற்சிகள் நடத்தப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


இதனை தொடர்ந்து நேற்று காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் அனந்தாக் போன்ற மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட, பல  இளைஞர்களை மூளைச்சலவை செய்த இஸ்லாமிக் செமினெரி தலைவர் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர்.

இந்த நிலையில் இன்றும் காஷ்மீரில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கர சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் நிலவி உள்ளது.

Tags:    

Similar News