நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி வாய்ந்த கற்கள் : ராமர் கோயில் கட்டுமான பணியில் இவ்வளோ பிரம்மாண்டம் இருக்கிறதா?

Update: 2022-11-09 06:45 GMT

ராமர் கோயில் அஸ்திவாரம் 

ராமர் கோயில் வளாக அஸ்திவாரத்தின் அடித்தள‌ம் 40 அடி ஆழத்தில் அமைய இருக்கிறது. இதற்கு 5 அடி நீளம், 3 அடி தடிமன், 2.75 அடி அகலம் கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி வாய்ந்த கற்கள் கர்நாடகாவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சிக்கப்பள்ளாப்பூர் கற்கள் 

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் மிக உறுதியானவை. இந்த கற்கள் நிலநடுக்கத்தையும் தாங்கும் சக்தி படைத்தவை. இதனால் பெரிய கட்டுமானப் பணிகளுக்கு இங்கிருந்து கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்புஉள்ளது. இதனால் இந்த கற்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கற்கள் சோதனை  

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் அஸ்திவாரப் பணிகளுக்கு சிக்கப்பள்ளாப்பூர் கற்கள் தேர்வாகியுள்ளன. இதற்காக சிக்கப்பள்ளாப்பூர் கற்கள் 1500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் 24 மணி நேரத்துக்கும் மேலாக உறைபனி வெப்பநிலையில் வைத்தும் சோதிக்கப்பட்டது. சிக்கப்பள்ளாப்பூரில் உள்ள பாறைகள் 2,500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. இவை மிகவும் உறுதியான கிரானைட் வகையை சேர்ந்தவை. எனவே நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவை என புவியியல் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர் மஹ்பலேஷ்வர் கூறினார். 

Input From: swarajyamag

Similar News