அரசு இல்லத்தில் நீச்சல் குளம் கட்டிய மாவட்ட ஆட்சியர்.!
தற்போது மைசூரு துணை ஆணையரின் அரசு இல்லத்தில் ரோகிணி சிந்தூரி அனுமதி பெறாமல் நீச்சல் குளம் ஒன்றை கட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. இவர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் தவறு செய்பவர்களிடம் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் எதாவது ஒரு சர்ச்சையில் அடிக்கடி மாட்டிக்கொள்வது இவரின் வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் தற்போது மைசூரு துணை ஆணையரின் அரசு இல்லத்தில் ரோகிணி சிந்தூரி அனுமதி பெறாமல் நீச்சல் குளம் ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது கர்நாடக அரசு கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது.