இந்து அமைப்பு நிர்வாகி வெட்டிப்படுகொலை! கர்நாடகாவில் 144 தடை உத்தரவு!

Update: 2022-02-21 06:00 GMT

சிவமொக்கா நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்துக்கள் மற்றும் முஸ்லிம் இடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா 24, இவர் பஜ்ரங்கதள் இந்து அமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இதனிடையே நேற்று நள்ளிரவு நேரத்தில ஹர்ஷா பாரதி காலனி வீதியில் மோட்டார் சைக்களிள் மூலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த படுகொலைப்பற்றி அறிந்த தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பஜ்ரங்கதள் இந்து அமைப்பு நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதனால் அங்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரண்டு தரப்பினரையும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்டவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News