இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவில் சென்ற பஜ்ரங்தள் நிர்வாகி இறுதி ஊர்வலத்தில் கலவரம்!

Update: 2022-02-21 13:03 GMT

கர்நாடக மாநிலம், சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா 24, பஜ்ரங்தள் அமைப்பில் நிர்வாகியாக இருக்கும் நிலையில், இவரை நேற்று (பிப்ரவரி 19) இரவு 11 மணிக்கு மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு வெட்டிபடுகொலை செய்தனர். இவரது படுகொலை சம்பவம் சிவமொக்கா மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் இந்து அமைப்புகள் ஒன்றுகூடியதால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஹர்ஷாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் பஜ்ரங்கதள் அமைப்பை சேர்ந்தவர்கள் பல நூறு கலந்து கொண்டனர். மேலும், முஸ்லிம்கள் வசிக்கின்ற சி.வி.நகர் பகுதியில் ஹர்ஷாவின் உடல் கொண்டு செல்லப்பட்டபோது திடீரென்று அங்கு இருந்தவர்கள் கடைகளுக்கு, இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் சிவமொக்கா நகரில் மிகப்பெரிய பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. பதட்டத்தை தணிப்பதற்காக மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News