காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம் - காவல்துறை ஆய்வாளர் படுகொலை

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம், இதன் காரணத்தால் போலீஸ் ஆய்வாளர் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-14 07:50 GMT

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம், இதன் காரணத்தால் போலீஸ் ஆய்வாளர் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் குல்ஹம் மாவட்டத்தில் உள்ள கோயமா பகுதியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் தாகிர் கான் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தீவிரவாதிகள் அவர் மீது கையறி குண்டுகளை வீசி தப்பிவிட்டனர். இதில் பலத்த காயமான தாகூர் அங்கிருந்தவர்கள் உதவியில் அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் நீத்தார்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

Similar News