பயங்கரவாதிகள் பண பரிமாற்றம், ஆட்கள் சேர்ப்பிற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர் - ராஜ்நாத் சிங்

'பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்க முடியாது' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-24 06:01 GMT

'பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்க முடியாது' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அமைப்பு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் ஒன்பதாவது வருடம் கலந்தாலோசனை கூட்டம் கம்போடியாவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக கம்போடியா சென்றார். அங்கு நேற்று நடைபெற்ற ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அதற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத குழுக்கள் பண பரிமாற்றத்திற்கும், ஆதரவாளர்களை சேர்ப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்களை பயணித்து உலகம் முழுவதும் உள்ள தொடர்புகளை உருவாக்கி உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


Source - Dinathanthi

Similar News