புதிய கொரோனாவுக்கு இந்திய மக்கள் அச்சப்பட தேவையில்லை.. மத்திய சுகாதார துறை அமைச்சர் தகவல்.!

புதிய கொரோனாவுக்கு இந்திய மக்கள் அச்சப்பட தேவையில்லை.. மத்திய சுகாதார துறை அமைச்சர் தகவல்.!

Update: 2020-12-21 18:06 GMT

உலகிலேயே முதன் முதலில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நாடு இங்கிலாந்து மட்டும்தான். முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

தடுப்பூசி போடத் தொடங்கிய சில நாட்களிலேயே இங்கிலாந்தில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டது. தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 3 அடுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாடுகளுக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இந்தியாவும், பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் நாளை, (22ம் தேதி) நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்கும் வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வைரஸ் பற்றி விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் அவசரக் கூட்டத்தை டெல்லியில் இன்று நடத்திது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியான டாக்டர் ரோடெரிகோ எச்.ஓஃப்ரின், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு, பின்   பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருக்கிறது.

மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் நன்கு அறிவோம். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தான் நான் கூறுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News