உலகத்தின் பார்வை அனைத்தும் இந்தியா மீது உள்ளது: பிரதமர் மோடி பேச்சு!

Update: 2022-03-17 11:16 GMT

முசோரியில் அமைந்திருக்கும் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி சார்பில் இன்று நடைபெற்ற 96வது பொது அறக்கட்டளை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், அவர் பேசும்போது; தற்போதைய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீது உள்ளது. இந்தியா துரிதமக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் எடுக்கின்ற முடிவுகளை கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதனை புரிந்து கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுவது அவசியம். எனவே அவற்றுடைய காரணங்களையும் புரிந்து நடக்க வேண்டும்.

மேலும், எப்போதுமே அவசரமான முடிவுகளை எடுக்கக்கூடாது. சவாலான காரியங்களை செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். வரிசையில் நிற்கின்ற கடைசி மனிதரை வைத்து முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News