ஜம்மு காஷ்மீரில் 3 லஷ்கர் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்!

Update: 2022-06-13 05:31 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த மூன்று பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர், புல்வமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹுதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதே போன்று தெற்கு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. அப்போது மூன்று பயங்கரவாதிகளையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. இவர்கள் பற்றி விசாரணை நடத்தியதில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. உயிரிழந்த ஒரு பயங்கரவாதி ஜுனைத் என்பவன் போலீஸ் ஒருவரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Zee News

Tags:    

Similar News