தேசிய தன்வந்திரி விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் மருத்துவர் - யார் தெரியுமா?

தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருது மத்திய கலாச்சார துறை வழங்கியது.

Update: 2022-10-04 05:09 GMT

பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருது கோத்தகிரியை சேர்ந்த பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருதை மத்திய கலாச்சாரத்துறை வழங்கியது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின கிராமமான கரிக்கையூர் பகுதியை சேர்ந்தவர் தான் காளியம்மாள். இவர் தனியார் அறக்கட்டளை ஒன்றுடன் இணைத்து பண்டைய முன் பழங்குடியினர் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தில் பணிபுரிந்து வருவதுடன் தற்பொழுது மூலிகை மருத்துவ உற்பத்தி குழுவின் தலைவர் ஆகவும் செயல்பட்டு வருகிறார். அவர் பெங்களூரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத பார்வை 2047 தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு கருத்தரங்கு கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம்களில் பங்கேற்றார்.


இது நீலகிரி மாவட்டத்தில் இருந்து பாரம்பரிய மருத்துவத் திட்டத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 20 மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் பழங்குடிய கிராமங்களில் பாரம்பரிய மருத்துவ பணிகளில் சிறப்பாக செய்து வரும் காளியம்மாளுக்கும் மத்திய கலாச்சாரத்துறை சார்பில் தேசிய அளவிலான தன்வந்திரி விருதை டாக்டர் ஹரிராமமூர்த்தி வழங்கினார்.


இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தொலைதூர கிராமங்களில் சுகாதார செய்தியின் பாரம்பரிய மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இயற்கை மூலிகை கொண்ட சிகிச்சை செய்யும் இந்த பாரம்பரிய மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது மற்றொரு சிறப்பு அம்சம். இந்த மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு உதவிகளை செய்து வருகின்றது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் காளியம்மாள் நூறு பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளை உருவாக்கியதற்காக வழங்கப்படும் தன்வந்திரி விருதை தற்போது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News