மாட்டுச் சாணத்தில் உருவான பெயிண்ட்.. நாளை அறிமுகப்படுத்துகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

மாட்டுச் சாணத்தில் உருவான பெயிண்ட்.. நாளை அறிமுகப்படுத்துகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Update: 2021-01-11 16:29 GMT

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத விஷத் தன்மையற்ற புதுமையான பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள புதுமையான பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை ஜனவரி 12ம் தேதி அவரது இல்லத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

இதற்கு ‘காதி இயற்கை வர்ணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சுவர் பூச்சுக்கலவை, பூஞ்சைக்கும், நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் வர்ண தயாரிப்பாகும். பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சுக்கலவை குறைந்த விலையில்  இருப்பதுடன் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது.

காதி இயற்கை வர்ணம் 2 விதங்களில் கிடைக்கின்றன- டிஸ்டம்பர் வர்ணம், நெகிழி எமல்ஷன் வர்ணம். இதன்மூலம் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதுடன், தொழில்நுட்ப மாற்றத்தின் வாயிலாக நிலையான வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News