உத்தரகாண்ட் பத்ரிநாத், கேதார்நாத் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - காஷ்மீர் தீவிரவாத அமைப்பு பழிவாங்கும் நடவடிக்கை

உத்தரகாண்ட் கோவிலுக்கு தீவிரவாத அமைப்பால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-17 10:16 GMT

உத்தரகாண்ட் கோவிலுக்கு தீவிரவாத அமைப்பால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள், ஹரித்துவார் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஹரிதுவார் ரயில்வே ஸ்டேஷனுக்கு சமீபத்தில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

ஜெஸ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ஜமீர் அகமது என்பவர் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களை வரும் 27ஆம் தேதியும், ஹரிதுவார், டேராடூன் உள்ளிட்ட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களை வரும் 25ம் தேதி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தப் போவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Similar News