குறைவான விலையில் தடுப்பூசி நிச்சயமாக கிடைக்கும்.. பிரதமர் மோடி தகவல்.!

குறைவான விலையில் தடுப்பூசி நிச்சயமாக கிடைக்கும்.. பிரதமர் மோடி தகவல்.!

Update: 2020-12-04 13:31 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான், போன்ற உலக நாடுகள் தடுப்பூசிகளை தயார் செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகள் 2ம் கட்டம் மற்றும் 3ம் கட்ட சோதனையில் உள்ளது.


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பு மருந்து பற்றி பேசுவதற்கு இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்குவது மற்றும் அதனை முன்களபணியாளர்களுக்கு முதலில் போடுவது போன்றவை ஆலோசிக்கப்பட்டது.


மேலும், இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் நிச்சயமாக கிடைக்கும் என மோடி கூறியுள்ளார்.
 

Similar News