வினைதீர்க்கும் விநாயகன்! இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2021-09-10 05:03 GMT

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

புதிய விநாயகர் சிலைகளை வாங்கி வந்து ஒவ்வொரு கோயில் மற்றும் வீடுகள் முன்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அருகம்புல், மல்லிகைப் பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் உள்ளிட்டவைகளை படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி நாளில் உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோருக்கு உண்டு, விநாயகர் கோயில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News