கர்ப்பிணி பசுவை கொடூரமாக பலாத்காரம் செய்த 29 வயது இளைஞன் - அதிக ரத்தப்போக்கு காரணமாக பசு இறந்த சோகம்!
29 வயதான பிரத்யுத் புய்யா, மேற்கு வங்க காவல்துறையினரால் கர்ப்பிணிப் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். பர்கானாஸ் மாவட்டம், நம்கானா தொகுதியின் வடக்கு சந்தன்பிடி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பசு நள்ளிரவில் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டின் உரிமையாளர் நகர காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டின் பின்புறம் இருந்து கால்நடைத் தொழுவத்திற்குள் நுழைந்து பசுவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆர்த்தி புய்யா புகாரில் குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அதிக இரத்தப்போக்கு காரணமாக மாடு இறந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் இதற்கு முன்பு ஆடு, வாகனங்கள் மற்றும் வயல்களில் இருந்து காய்கறிகளை திருடியுள்ளார்.
இந்த வழக்கில், மேற்கு வங்க போலீசார் பிரத்யுத் புய்யாவை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காக்ட்வீப் சப்-டிவிசனல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Input From: Opindia