எதை, எதை செய்ய வேண்டும், எதை, எதை செய்யக் கூடாது: மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் கண்டிப்புடன் அறிக்கை !

எதை, எதை செய்ய வேண்டும், எதை, எதை செய்யக் கூடாது: மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் கண்டிப்புடன் அறிக்கை !

Update: 2020-12-19 16:04 GMT

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் தனது கட்சிக்கு ‘பாபா முத்திரை’ சின்னத்தை அவர் கேட்பதாக செய்திகள் கூறுகின்றன. 

ஆனால் இது தொடர்பாக ரசிகர்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பு வரும், அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டுமெனக் கூறி ரஜினி மன்ற தலைமையகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.  

இந்நிலையில்,  மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ம்தேதி அன்று பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும்  ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மன்ற நிர்வாகிகள் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர், பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது,
சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும்,

மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும், ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது போன்ற அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தற்போது  ரஜினி கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

Similar News