"சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?"-உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி !

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

Update: 2021-09-20 07:36 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

இந்த உத்தரவால் மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையம் விழி பிதுங்கி நிற்கிறது. தமிழகத்தில் தற்போது தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது 9 மாவட்டங்களை தவிர்த்து மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு பயந்து தள்ளிப்போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News