தமிழகத்தில் வரும் 2021 தேர்தலில் 50 இடங்களில் ஒவைசியின் கட்சி போட்டியா? - தமிழக கட்சிகள் கிலி.!
தமிழகத்தில் வரும் 2021 தேர்தலில் 50 இடங்களில் ஒவைசியின் கட்சி போட்டியா? - தமிழக கட்சிகள் கிலி.!
தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரம் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மாநகரமாகும். அதிக அளவில் நவீனத்தின் தாக்கத்தை உணராத அல்லது விரும்பாத பாரம்பரிய முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடம் ஹைதராபாத் நகரமாகும். இந்த ஹைதராபாத் எப்போதுமே காங்கிரசின் நிரந்தரமான கோட்டையாக 2000 ஆம் ஆண்டு வரை இருந்தது.
அதன் பின் பல காரணங்களால் காங்கிரஸ் செல்வாக்கிழந்த நிலையில் இங்கு நன்கு படித்தவரான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கியது. ஐதராபாத் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக தொடர்ச்சியாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருபவர் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் ஓவைசி.
ஒவைசியின் இந்த வெற்றிக்கு காரணம் அவர் கொண்ட கொள்கைதான் என்கிறார்கள் ஆந்திர அரசியல் பிரமுகர்கள். ஒரு பக்கம் தீவிர இஸ்லாம் மார்க்கம், அதே சமயம் இன்னொரு பக்கம் ஆழமான இந்திய தேசீயம் என்ற இருமுனை கொள்கைகளை கொண்ட இவரின் புதிய சிந்தனை காங்கிரஸ் கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்த ஹைதராபாத் வாசிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது,
எனவே ஹைதராபாத்தில் உள்ள குறிப்பாக பழைய ஹைதராபாத்தில் அடர்ந்து வாழும் இஸ்லாமியர்களின் செல்ல கட்சியாக இவரது கட்சி மாறியது.
மற்ற இஸ்லாமிய கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் ஆளும் கட்சி அல்லது மற்ற பெரிய கட்சிகள் தரும் தொகுதிகள் ஒதுக்கீட்டுடன் திருப்தி பட்டுக் கொள்ளும். அதன் பிறகு அவர்கள் மிகப்பெரிய அளவில் முஸ்லிம் பிரச்சனைகளை மற்ற அரசியல் கட்சிகளை மீறி எதிரொலிக்க மாட்டார்கள், ஆனால் ஒவைசி தன் மனதில் படும் எதையும் நறுக் என கூறிவிடுவார். அதே சமயம் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு எதையும் சிந்திப்பவர், உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தை இவர் ஆதரிக்க மாட்டார்,