செல்லப்பிராணிக்காக ரூ.2 லட்சம் செலவு செய்த பெண்! குவியும் பாராட்டுக்கள்!

மும்பையில் இருந்து சென்னைக்கு பெண் ஒருவர் விமானத்தில் தனது செல்லப்பிராணியுடன் வருகை புரிந்திருந்தார். இவர் வருகையை விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமின்றி, விமான நிலையத்திலும் ஆச்சரியமாக பார்த்தனர்.

Update: 2021-09-21 11:11 GMT

மும்பையில் இருந்து சென்னைக்கு பெண் ஒருவர் விமானத்தில் தனது செல்லப்பிராணியுடன் வருகை புரிந்திருந்தார். இவர் வருகையை விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமின்றி, விமான நிலையத்திலும் ஆச்சரியமாக பார்த்தனர்.

மும்பையில் இருந்து சென்னைக்கு தனது செல்லப்பிராணியுடன் பயணம் செய்ய அனைத்து பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்களையும் வாங்கி பயணம் செய்துள்ளார். இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஒரு விமானத்தில் 10 முதல் 12 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் இருக்கும் எனவும், இதன் கட்டணமாக ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


இதற்காக மும்பையில் இருந்து சென்னை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர், தனது செல்லப்பிராணிக்காக 12 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்கான டிக்கெட்களையும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளார். இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவு செய்துள்ளார். செல்லப்பிராணிக்காக இவ்வளவு பணத்தை செலவு செய்து விமானத்தில் பயணம் மேற்கொள்ள வைத்துள்ள சம்பவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News