விளையாட்டு போட்டிகளில் யோகா.. மத்திய அரசு.!

விளையாட்டு போட்டிகளில் யோகா.. மத்திய அரசு.!

Update: 2020-12-18 17:02 GMT

நமது பாரம்பரிய யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அறிவித்துள்ளது மத்திய ஆயுஷ் அமைச்சகம்.  பா.ஜ.க., அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நமது பாரம்பரிய யோகாவை உலக அளவில் பேசும் பொருளாக மாற்றியது.

ஆண்டுதோறும் உலக யோகா தினம் கொண்டாடி வந்த நிலையில் இப்போது யோகாசனத்தை விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. 

இதன் மூலம் யோகா உலகம் முழுவதும் சென்று சேரும் என்று சொல்லப்படுகிறது. ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

இனி கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக யோகாசனப் போட்டிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News