காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்திஷ்கர் : தசரா விழாவில் புகுந்த கார் ! இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு, 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஜாஷ்பூரில் தசரா பண்டிகை ஊர்வலத்தின் போது கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்ததால் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-16 05:41 GMT

ஜாஷ்பூரில் தசரா பண்டிகை ஊர்வலத்தின் போது கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்ததால் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் என்ற இடத்தில் தசரா பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது பண்டிகையில் அதிகமான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக கார் ஒன்று ஊர்வலத்தில் புகுந்தது. இதில் கவுரவ் அகர்வால் 21, என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்ளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: TopNews Tamil


Tags:    

Similar News