கிறிஸ்தவ மத போதனை என்ற பெயரில் பாலியல் தொழில் - பாதிரியார் கைது!

Update: 2021-07-14 04:56 GMT

கன்னியாகுமரி அருகே மத போதனை என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ மத போதகர் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி எஸ்டி மங்காடு பகுதியில் லால் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் மத போதனை நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் சந்தேகப்படும்படியான வேலைகள் நடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்ததில் அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மத போதனை செய்து வந்த லால் என்பவர் உட்பட 7 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலியல் தொழிலுக்காக 19 வயதான பெண்ணை அவரது தாயாரே அங்கு வந்து சேர்த்தது தெரியவந்துள்ளது.

கிறிஸ்தவ மத போதனை என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த லால் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற சர்ச்சுக்கு எங்கெல்லாம் இருந்து நிதி கிடைத்துள்ளது என்பது போன்ற விசாரணையை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற போலியான மத போதனை கூட்டங்கள் நடைபெற்று வருவதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Similar News