தேசிய மருத்துவர் தினம் ஏன் ஜூலை 1ல் கொண்டாடப்படுகிறது? #NationalDoctorsDay
தேசிய மருத்துவர் தினம் ஏன் ஜூலை 1ல் கொண்டாடப்படுகிறது? #NationalDoctorsDay
இதற்கு முன்னர் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை நாம் அடையாளம் கண்டிருக்கவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை நாம் நிச்சயமாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும்போது, கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிருக்காகத் தொடர்ந்து போராடுவது மருத்துவர்கள்தான். நோய்த்தொற்றுடையவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், என்னன்னவோ நோய்களில் இருந்து நாம் சிகிச்சை பெற்று, குணமடைய போராடும் மருத்துவர்களைப் பாராட்டுவதும், அங்கீகரிப்பதும் முக்கியமான செயலாகும். டாக்டர்கள் உண்மையிலேயே மிகப் பெரிய ஹீரோக்கள் தான். நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும்.
இந்தியா, தேசிய மருத்துவர் தினத்தை இன்று (ஜூலை 1) கொண்டாடுகிறது. சிறந்த மருத்துவரும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு தினத்தை முன்னிட்டு இது கொண்டாடப்படுகிறது. அப்போதிருந்து இந்தியா மருத்துவத் துறையில் பல உயரங்களைத் தொட்டுள்ளது. டாக்டர் பி.சி. ராயின் மருத்துவப் பங்களிப்பை புதிய மற்றும் புதுமையான நுட்பங்களுடன் விரிவுபடுத்தியுள்ளோம். அவரை நினைவுகூறுவதன் மூலம் தன்னலமற்ற முறையில் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்காக அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த நாள் உதவுகிறது.
பாட்னாவில் ஜூலை 1, 1882 இல் பிறந்த ராய், சமூக-மத இயக்கமான பிரம்ம சமாஜின் நெருங்கிய ஆதரவாளர்களான பெற்றோருடன் வளர்ந்தார்.
மருத்துவத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் இங்கிலாந்து சென்று அங்கு லண்டனில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் பார்தலோமிவ் மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனையின் டீன் அவரை (அல்லது எந்த ஆசியரையும்) இந்த நிறுவனத்தில் சேர்க்க தயங்கினாலும், ஒன்றரை மாத தொடர்ச்சியான விடாமுயற்சி மற்றும் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்குப் பிறகு டீன் மனம் மாறி அவரை சேர்த்துக் கொண்டார்.