சீன அரசிடமிருந்து விலக முயற்சிக்கும் அலிபாபா, டிக் டாக் நிறுவனங்கள் - கொரோனா பெருந்தொற்று எதிரொலி.!
சீன அரசிடமிருந்து விலக முயற்சிக்கும் அலிபாபா, டிக் டாக் நிறுவனங்கள் - கொரோனா பெருந்தொற்று எதிரொலி.!
வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுவதை எப்படித் தடுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மேலும் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது.
உலகளாவிய நிறுவனங்கள் மட்டுமல்ல அலிபாபா, டிக் டாக் போன்ற சீன நிறுவனங்களும் சீனாவைத் தாண்டி யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலால் அனைத்து நாட்டு மக்களும் சீனாவின் மேல் வெறுப்பில் இருக்கும் நிலையில், டிக் டாக் தன்னை ஒரு உலகளாவிய நிறுவனமாகக் காட்டிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கையில், அலிபாபாவோ நன்கொடைகள், மருத்துவப் பொருட்களை இலவசமாக அனுப்பி வைத்தல் என்று கைகூசாமல் செலவழித்து பிற நாட்டு நற்பெயரை சம்பாதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இல்லையென்றால் வியாபாரமே செய்ய முடியாது என்ற நிலை இருப்பதால், சீன நிறுவனங்கள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவை. இந்த மாதிரி தொடர்பு உள்ள Huawei, டிக் டாக், அலிபாபா போன்ற நிறுவனங்களை தங்களது நாட்டில் செயல்பட விடுவது பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன.
ஆரம்ப காலத்திலேயே டிக் டாக் அபாயகரமானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கைப்பாவையாக டிக் டாக் சீனாவை விமர்சிக்கும் பதிவுகளை சுவடில்லாமல் அழித்ததன் மூலம் உண்மை என்று நிரூபணமாகிவிட்டது.
தற்போது சீனா வேண்டுமென்றே கூட வைரஸை பரப்பி இருக்கலாம், தெரிந்தும் தெரியாதது போல் இருக்கலாம், எப்படியானாலும் இந்த விஷயத்தில் சீன அரசின் செயல்பாடு சந்தேகத்திற்குரியது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும் நிலையில் டிக் டாக் செயலி தன்னை சீன அரசிடமிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறது.
'சீன செயலி' என்ற அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் கெவின் மேயரை டிக் டாக் செயலி மற்றும் அதன் மூல நிறுவனமான ByteDanceன் தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒரு அமெரிக்கர் நிறுவனத்தை நிர்வகிப்பதால் தாங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் அல்ல என்று உலகிற்கு காட்ட முயற்சிக்கிறது.