தென்காசியில் பட்டா நிலத்தில் இருந்த ஹிந்துக் கோவிலை 'சிறுபான்மையினர்' புகாரால் இடித்த மாவட்ட நிர்வாகம் - கொந்தளிக்கும் கிராம மக்கள்!
தென்காசியில் பட்டா நிலத்தில் இருந்த ஹிந்துக் கோவிலை 'சிறுபான்மையினர்' புகாரால் இடித்த மாவட்ட நிர்வாகம் - கொந்தளிக்கும் கிராம மக்கள்!
அண்மையில் தென்காசியில் அடிப்படை இஸ்லாமியர்களின் தூண்டுதலின் பேரில் நாடார் சமூகத்திற்கு சொந்தமான இந்து கோயில் இடிக்கப்பட்டுள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மாநில அரசு ஆகியவை இணைந்து இவ்வித செயல்களின் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம், கன்னியாகுமரியில் தனியார் பட்டா நிலத்தில் இருந்த ஒரு கோவிலின் வளாகத்தில் நிறுவப்பட்ட பாரத் மாதா சிலை ஒரு சில கிறிஸ்தவ மிஷனரிகளின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து போலிஸாரால் மூடப்பட்டது. பா.ஜ.க, இந்து முன்னணி போன்றோரின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, மூடிய துணியை போலீசார் அகற்றினர்.
தென்காசி மாவட்டத்தில், நாடார் சமூகம் முதன்மையாக சிறு வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. சம்பன்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவிலில் தலைமுறைகளாக ஒன்றாக அவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள் மற்றும் அதை குல தெய்வமாக கருதுகிறார்கள். இந்த கோயில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டது மற்றும் ஆண்டுதோறும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த குக்கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர், இங்குள்ள இஸ்லாமியர்களிடமிருந்து தொடர்ச்சியான இடையூறுகளால் இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களால் இந்துக்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI ) மற்றும் முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த சில அடிப்படைவாத இஸ்லாமியர்கள், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதவாத சண்டைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். சமீபத்தில், காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவிலில் புனரமைப்பிற்கு அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர், இது முஸ்லீம் பெண்கள் வெளியில் குளிக்கும் பிரைவசியை பாதிக்கிறது என்று கூறினர். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சிறுபான்மையினருக்கு சேவை செய்வது போல், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், இந்துக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கோயிலை நேரடியாக புல்டோசர் வைத்து இடித்து விட்டனர்.