மாட்டிறைச்சியை சமைக்கச் சொல்லி வற்புறுத்திய பாதிரியார் - தாய்மதம் திரும்ப விரும்பும் பழங்குடிக் குடும்பம்.!
மாட்டிறைச்சியை சமைக்கச் சொல்லி வற்புறுத்திய பாதிரியார் - தாய்மதம் திரும்ப விரும்பும் பழங்குடிக் குடும்பம்.!
பேரிடர்களை பெரும் உபாயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் மிஷனரிகளுக்கு இருக்கிறது. நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி என இயற்கை பேரழிவுகளால் மக்கள் உணவு, உடை, உறைவிடம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் போது பரிதாபத்தையும் இரக்கத்தையும் ஏற்படுத்துவதை விட மிஷனரிகளின் கண்களுக்கு அது ஒரு சிறந்த வாய்பாகவே தெரியும். அதுதான் தற்போதும் நடக்கிறது. அப்படித் தான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவுவதாகக் கூறி மதமாற்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இவ்வாறு ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி கட்டாய மதமாற்றம் செய்யும் மிஷனரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. ஹேமந்த் ஷோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறது.
மேலும், Opindia இணைய இதழிடம் ஒரு வருடத்திற்கு முன் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அதைத் தவறு என்று உணர்ந்து இந்து மதம் திரும்ப விழைவதாகக் கூறும் காணொளியை விஹெச்பி பகிர்ந்துள்ளது.
.
விஹெச்பியின் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளர், கேசவ் ராஜூ பகிர்ந்த இந்த காணொளியில், ஜாம்ஷெட்பூரில் மாவட்டத்தின் பராசுதி பகுதியில் உள்ள சோபோதேரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தாலி இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி ரமேஷ் ஹன்ஸ்டா, ஒரு வருடம் முன்பு எவ்வாறு தனது குடும்பம் ஒரு பாதிரியாரால் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது என விளக்கியுள்ளார்.