"எங்கள உள்ள விட மாட்டீங்களா? அப்ப எங்க ஏரியாவுக்கு வராதீங்க" - புதுச்சேரி எல்லையில் போராட்டம்!

"எங்கள உள்ள விட மாட்டீங்களா? அப்ப எங்க ஏரியாவுக்கு வராதீங்க" - புதுச்சேரி எல்லையில் போராட்டம்!

Update: 2020-06-19 03:26 GMT

புதுச்சேரியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அவசர மருத்துவ உதவிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரி பகுதிக்குள் போலீசார் அனுமதிக்கப்படுவதில்லை இந்நிலையில் இன்று புதுச்சேரி- திண்டிவனம் எல்லையான கோரிமேடு பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வானுர் பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் இருந்து யாரையும் புதுச்சேரிக்குள் அனுமதிக்காத போது புதுச்சேரியில் இருந்து யாரையும் தமிழக பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி புதுச்சேரியில் இருந்து வந்தவர்களின் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புற படுத்தினர். அப்போது போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News