பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு - 9 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர்!
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு - 9 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர்!
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் தொழிலாளர் யூனியன்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதனால் அரசுத் தரப்புக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கூடுதலான செலவு ஏற்படும். இந்த ஊதிய உயர்வால் சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள். நவம்பர் 2017 தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தெரிகிறது.