இந்த இரு வீரர்களுடன் விளையாடுவது என்னுடைய அதிர்ஷ்டம் - ஷிகர் தவான்.!

இந்த இரு வீரர்களுடன் விளையாடுவது என்னுடைய அதிர்ஷ்டம் - ஷிகர் தவான்.!

Update: 2020-06-20 12:21 GMT

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் விளையாடுவது என்னுடைய அதிர்ஷ்டம் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சிறப்பான துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் இந்தியா அணிக்காக நிறைய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனால், இவருக்கு சமீபகாலமாக டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

தற்போது ஷிகர் தவான் கூறியது: ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு சிறப்பு இருக்கும், அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள். அவர்களுக்குள் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த விஷயங்கள்தான் ஒரு அணியை சிறப்பாக கட்டமைக்கும்.


ரோஹித் சர்மாவை பொருத்தவரை சிறிய அளவு ரன்கள் சேர்க்கும் வரை அதிகநேரம் எடுத்துக் கொள்வார். ரன்களை அடிக்க ஆரம்பித்து விட்டால் அவரின் விக்கெட்டை யாராலும் எடுக்க முடியாது. கேப்டன் விராட் கோலியை பொருத்தவரை ஆரம்பத்திலிருந்தே சீராகவும் சிறப்பாகவும் விளையாடுவார். இந்த சிறப்பான இரு வீரர்களுடன் அணியில் நானும் இடம் பிடித்து விளையாடுவது என்னுடைய அதிர்ஷ்டம்.

மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறேன். என்னுடைய மனம் முழுவதும் கிரிக்கெட் மைதானத்தில் தான் இருக்கிறது. சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடிப்பது போல கற்பனையாக நினைத்து பார்க்கிறேன். அரசு அனுமதித்த பின்னரே விளையாடுவோம்.மேலும், இந்தியா அணிக்காக நிறைய போட்டிகளை வெல்வோம் என கூறியுள்ளார். 

Similar News