நின்னை சரணடைந்தேன் என பாரதி சொன்னது இதை தானோ ? - சரணடைதல் குறித்து ஸ்ரீ ராமர் சொன்ன கதை
நின்னை சரணடைந்தேன் என பாரதி சொன்னது இதை தானோ ? - சரணடைதல் குறித்து ஸ்ரீ ராமர் சொன்ன கதை
சரணடைதல் என்பது உலகம் முழுவதும் உள்ள எல்லா மதங்களாலும் வலியுறுத்தப்படும் தத்துவம். சரணடைதல் என்பது வாழ்வை, பொறுப்புகளை, கடமையை துறந்து விடுவது அல்ல. நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் "நான் என்கிற தன்மையை" துறந்துவிடுவது. நாம், நான் என்ற தன்முனைப்பில் செய்யும் ஒரு செயலுக்கும், முழுவதுமாக கடவுளிடம் சரணடைந்து விட்டு ஒரு
செயலை செய்வதற்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது.
தன்முனைப்பால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மைதான். அனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையை தன்முனைப்பு தராது. மாறாக தன்முனைப்பு விரக்தியை தந்துவிடும். சரணடைதல் நம் வாழ்க்கையை எளிமையாக்குகிறது. சரணடைவதால் நம் உடலும் மனமும் இலகுவாகிறது. தன்முனைப்பால் செய்கின்ற காரியங்களை விட ஆயிரம் மடங்கு வலிமையானா காரியங்களை சரணடைவதின் மூலம் செய்து விட முடியும். இந்ததியாவில் தோன்றிய சீக்கிய மதம் சரணடைதலை பெரிதும் வலியுறுத்துகிறது.
இன்னும் சொல்வதென்றால் சிக்கிய மதத்தின் உயிர் நாடியே சரணடைவது தான். 'அகால் புருஷ்"; என்று அவர்கள் இறைவனை உருவாக படுத்துகின்றனர். ஓர் இறைத்தன்மை என்று அதற்கு பொருள் இந்த
ஓர் இறைத்தன்மையை அவர்கள் "குரு" வாக உருவகப் படுத்துகின்றனர் .
";வாஹே குரு"; என்கிற சீக்கிய மதத்தின் மந்திரம் "குரு நல்லவர் என்பதோ குரு நம்மை காப்பாற்றுவார்" என்பதோ அல்ல மாறாக "குரு எவ்வளவு அற்புதமானவர்" என்று குருவை வியக்கிறது.
இந்த வார்த்தையில் விண்ணப்பம் எதுவும் இல்லை வாழ்வை பற்றிய பயம் அல்லது எதிர்பார்ப்பு உள்ளவர்களே மந்திரத்தில் விண்ணப்பத்தை வைப்பார்கள். சீக்கிய மதம் இந்த மந்திரத்தின் மூலம் ஏக இறைவனான குருவிடம் முற்றும் முழுவதுமாக சரணடைந்து விடுகிறது.
சரணடைவதின் தத்துவம் மிக அற்புதமானது. இந்து மதத்தின் இதிகாசமான இராமாயணத்தில் சரணடைவதின் தத்துவம் மிக அற்புதமாக யுத்த காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ராமனுக்கே "சரண்யன்" என்று பெயர் அதாவது சரணடைபவர்களை தவறாமல் காப்பவன் என்று பொருள். யுத்தத்திற்கு முன்பதாக விபீஷணன் ராமனை நோக்கி வரும்போது ராமனுடன் இருந்த வானரர்கள் ஏன் அனுமான் கூட விபீஷணனை ஏற்றுக்கொள்ள கூடாது என்று வாதிட்டனர்.