உதயம் தியேட்டர் ஓனர் அதிரடி பேட்டி - பெரிய நடிகர், நடிகைகளை உருவாக்கிய தியேட்டர்கள் தான் என காரசாரமாக பேசியுள்ளார்.!

உதயம் தியேட்டர் ஓனர் அதிரடி பேட்டி - பெரிய நடிகர், நடிகைகளை உருவாக்கிய தியேட்டர்கள் தான் என காரசாரமாக பேசியுள்ளார்.!

Update: 2020-07-02 04:03 GMT

இந்த லாக்டவுனில் தியேட்டர் ஓனர்கள் படும் ஒட்டுமொத்த துயரத்தையும் உதயம் தியேட்டர் ஓனர் சண்முகம் அளித்த ஸ்பெஷல் பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி OTT-ல் படங்களை அப்போதே வெளியிட்டு இருந்திருந்தால், எந்த ஹீரோவும் டாப் ஹீரோவாக ஆகி இருக்க முடியாது. பெரிய ரசிகர்கள் கூட்டமும் உருவாகி இருக்காது.

அசோக் நகரின் அடையாளம் உதயம் தியேட்டர் 30, ஆண்டுகளாக இயங்கி வருகிறது.எத்தனையோ வெற்றி, தோல்விகள், பேரிடர்களை சந்தித்து இருக்கும் நிலையில், இப்படியொரு லாக்டவுனை இதுவரை தனது வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என சண்முகம் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 17ம் தேதி போடப்பட்ட பூட்டு, இன்னும் திறக்காமல், ரசிகர்கள் கூட்டம், கொண்டாட்டம் இல்லாமல், நகரும் நாட்களை பார்க்கும் போது மிகுந்த மன வேதனையுடன் கூறியுள்ளார்.

Similar News