டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்!

Update: 2020-06-13 05:48 GMT

ஒருவருக்கு கொரோனா என்றால் நாம் அச்சமடைகிறோம் ஆனால் தலைநகர் டெல்லியில் ஒரு குடும்பமே கொரோனா அரக்கன் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கொரோனா தொற்றில் இருந்தால் இது போன்ற ஆபத்தான நிலையை  எப்படி  சமாளித்தார்கள் என்பது சவாலான காலம் தான் 

கொரோனா கிருமித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 17 பேர் கொண்ட குடும்­பம் சுமார் ஒரு ­மாத காலம் போராடி

வெற்றி கண்­டுள்­ளது

வட­மேற்கு டெல்­லி­யில் வசிக்­கும் முகுல் கார்க், வாழ்க்­கை­யின் மகிழ்ச்சி மற்­றும் மோச­மான கால­கட்­டங்­களை தமது குடும்­பம் ஒரு­சேர கடந்து வந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

வட­மேற்கு டெல்­லி­யில் உள்ள மூன்று தளங்­கள் கொண்ட வீட்­டில் 33 வய­தான முகுல் கார்க் மூன்­றா­வது மாடி­யில் தம் மனைவி, இரு குழந்­தை­கள், பெற்­றோர் மற்­றும் பாட்­ட­னா­ரு­டன் வசிக்­கி­றார்.

மீத­முள்ள இரு தளங்­களில் அவ­ரது தந்­தை­யின் உடன்­பி­றந்­தோ­ரும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் உள்­ள­னர். வீட்­டி­லுள்ள 17 பேரில் பிறந்து 4 மாதங்­களே ஆன பச்சிளம் குழந்தை தொடங்கி முகு­லின் 90 வய­தான பாட்­ட­னார் வரை படுத்த படுக்­கை­யாகிவிட்டனர்.

கடந்த ஏப்­ரல் 24ஆம் தேதி முகு­லின் மாமா­வின் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. அடுத்த 48 மணி நேரத்­தில் மேலும் இரு­வ­ருக்கு காய்ச்­சல் உண்­டா­ன­தும் பத­றிப் போனார் முகுல். அப்­போ­தும் அவர் மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு யாரை­யும் அழைத்­துச் செல்­ல­வில்லை.

ஆனால் மே முதல் வாரம் 54 வய­தான அவ­ரது அத்தை மூச்­சு­விட சிர­மப்­ப­டவே, பயந்துபோன முகுல், உட­ன­டி­யாக மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு ஏற்­பாடு செய்­தார்.

அதன் முடி­வில் வீட்­டி­லுள்ள 11 பெரி­ய­வர்­க­ளுக்கு கொவிட்-19 நோய் இருப்­பது உறு­தி­யா­னது.

உடனே எல்­லாமே பறி­போ­ன­தா­க­வும் தனி­மை­யா­க­வும் உணர்ந்­தோம். வீட்­டில் இருந்து யாருமே வெளியே போக­வில்லை. வெளி­ந­பர்­கள் யாரும் வீட்­டிற்­குள் வர­வும் இல்லை.

பிறகு எப்­படி கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது எனக் குழப்­ப­மாக உள்­ளது என்­கி­றார் முகுல்.

பின்­னர் 17 பேரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். நீரி­ழிவு, ரத்­தக்­கொ­திப்பு போன்ற உபா­தை­கள் உள்­ள­வர்­கள் ஒரு தளத்தி­லும், தீவிர காய்ச்­சல் உள்­ள­வர்­கள் தனி அறை­க­ளி­லும் தங்­கி­யுள்­ள­னர்.

Similar News