புதுச்சேரி : உறவினர்களை பார்க்க அனுமதிக்க கோரி 2 கைதிகள் மத்திய சிறைச்சாலை கட்டிடம் மீது ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.!

புதுச்சேரி : உறவினர்களை பார்க்க அனுமதிக்க கோரி 2 கைதிகள் மத்திய சிறைச்சாலை கட்டிடம் மீது ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.!

Update: 2020-06-25 12:27 GMT

புதுச்சேரி காலாபட்டில் அமைந்துள்ளது மத்திய சிறைச்சாலை இங்கு 60 க்கும் மேற்ப்பட்ட விசாரணை கைதிகளும், 60 தண்டனை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாடகளுக்கு முன்பு புதுச்சேரியில் ஒரு கொலை முயற்சி வழக்கில் தமிழக பகுதியை சேர்ந்த ஒருவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் பின் அவருக்கு சிறையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் தங்கி இருந்த சக கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.


இதில் ஒருவருக்கு இரு தினங்களுக்கு முன்பும் , மூன்று நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இந்நிலையில் கொரோனா காரணமாக சிறையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்க்க அனுமதிக்காதததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறைச்சாலையை முறையாக பராமரிக்க வில்லை எனக்கூறி சிறைச்சாலை வளாக கட்டிடத்தின் மீது ஏறி நின்று 2 விசாரணை கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டனர் இதே கோரிக்கைளை வலியுறுத்தி சிகக்காய் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 2கைதிகளை சிறை துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News