ரஷ்யா: 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்காலத்தை நீட்டிக்க ரஷ்ய வாக்காளர்கள் 'ஒப்புதல்'.! #Russia #Putin

ரஷ்யா: 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்காலத்தை நீட்டிக்க ரஷ்ய வாக்காளர்கள் 'ஒப்புதல்'.! #Russia #Putin

Update: 2020-07-02 02:17 GMT

2036 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அதிகாரத்தை தன் வசம் வைத்திருக்க அனுமதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருவதை பெரும்பான்மையான ரஷ்ய வாக்காளர்கள் அங்கீகரித்தனர், ஆனால் புதன்கிழமை முடிவடைந்த தேர்தல், வாக்காளர்கள் மீதான அழுத்தம் மற்றும் பிற முறைகேடுகளின் பரவலான கேள்விகளால் சந்தேகத்திற்குள்ளாகியது.

நாட்டின் பெரும்பாலான வாக்கெடுப்பு முடிவடைந்து, 20% ஓட்டுகள் கணக்கிடப்பட்ட நிலையில், 72% பேர் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவில் முதன்முறையாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காக, வாக்கெடுப்புகள் ஒரு வாரம் முழுவதும் நடத்தப்பட்டது.

மிகப் பெரிய பிரச்சாரமும், எதிர்க்கட்சிகள் சரியான வழியில் அந்தளவு ஈடு கொடுக்காததும் புடினுக்கு அவர் விரும்பிய முடிவைப் பெற உதவியது, ஆனால் பொது வாக்கெடுப்பு பங்கேற்பை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் வழக்கத்திற்கு மாறான வழிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவின் சந்தேகத்திற்குரிய சட்ட அடிப்படைகள் காரணமாக அவரது நிலை நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.

மாஸ்கோவிலும் மேற்கு ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் வாக்கெடுப்புகள் முடிவடைந்த நேரத்தில், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 65% ஆக இருந்தது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பிராந்தியங்களில், கிட்டத்தட்ட 90% தகுதி வாய்ந்த வாக்காளர்கள் வாக்குகளை அளிக்கின்றனர்.

ரஷ்யாவின் கிழக்கு திசையான சுச்சி தீபகற்பத்தில், மாஸ்கோவிலிருந்து ஒன்பது மணி நேரத்திற்கு முன்னால், 80% வாக்காளர்கள் திருத்தங்களை ஆதரித்ததைக் காட்டும் முழு ஆரம்ப முடிவுகளை அதிகாரிகள் விரைவாக அறிவித்தனர், மேலும் தூர கிழக்கின் பிற பகுதிகளில், 70% க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மாற்றங்களை ஆதரித்ததாகக் கூறினர்.

புடின் ஒரு மாஸ்கோ வாக்குச்சாவடியில் வாக்களித்தார், தனது பாஸ்போர்ட்டை தேர்தல் பணியாளரிடம் கடமையாகக் காட்டினார். நுழைவாயிலில் இலவச முககவசம் வழங்கப்பட்ட மற்ற வாக்காளர்களைப் போலல்லாமல் அவரது முகம், முகக்கவசம் இல்லாமல் இருந்தது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த புடின் - சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் வேறு எந்த தலைவரையும் விட நீண்ட ஆட்சி - 2024 இல் மீண்டும் போட்டியிடலாமா என்று பின்னர் முடிவு செய்வேன் என்று முதலில் கூறினார்.

அரசியல் ஆலோசகரான ஆய்வாளர் க்ளெப் பாவ்லோவ்ஸ்கி, "புடினுக்கு அவரது உள் வட்டத்தில் நம்பிக்கை இல்லை, அவர் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்" என்று பாவ்லோவ்ஸ்கி கூறினார். "மக்கள் ஆதரவை மறுக்கமுடியாத ஆதாரத்தை அவர் விரும்புகிறார்." என்று கூறுகிறார்.

அதை சட்டமாக்குவதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் போதுமானதாக இருந்தபோதிலும், 67 வயதான ரஷ்ய ஜனாதிபதி தனது அரசியலமைப்பு திட்டத்தை வாக்காளர்களிடம் காண்பித்து தனது பரந்த ஆதரவைக் காட்டவும், மாற்றங்களை ஜனநாயகம் போல் தோற்றமளிக்க வைக்கவும் வாக்கெடுப்பை அறிவித்தார். ஆனால் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று ரஷ்யாவை மூழ்கடித்தது, ஏப்ரல் 22ற்கு பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி கட்டாயப்படுத்தியது.

இந்த தாமதம் புடினின் பிரச்சார வேகத்தை இழக்க வைத்தது மற்றும் வைரஸிலிருந்து ஏற்பட்ட சேதம் அதிகரித்து பொது அதிருப்தி அதிகரித்ததால் அவரது அரசியலமைப்பு சீர்திருத்த திட்டத்தை செயலிழக்கச் செய்தது. வருமானம் வீழ்ச்சியடைவதும், வேலையின்மை அதிகரித்து வருவதும் அவரது ஒப்புதல் மதிப்பீடுகளை 59% ஆகக் குறைத்துவிட்டது, இது அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மிகக் குறைந்த மட்டமாகும் எனக் கூறப்படுகிறது.

இனி என்ன நடக்கிறது எனப் போகப் போகத்தான் தெரியும்.

Source: hindustan times

Similar News