உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்: சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட 30 சீன அதிகாரிகள் மீது ஐ.நா. குற்றவியல் நீதிமன்றத்தில் 80 பக்க புகார் மனு !!

உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்: சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட 30 சீன அதிகாரிகள் மீது ஐ.நா. குற்றவியல் நீதிமன்றத்தில் 80 பக்க புகார் மனு !!

Update: 2020-07-07 10:39 GMT

கிழக்கு துருக்கிஸ்தான் புலம்பெயர் அரசு மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகள் உய்கூர் முஸ்லிம்கள் மீதான சீனாவின் கொடுமைகள் பற்றி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.

இது தொடர்பாக கிழக்கு துருக்கிஸ்தான் அமைப்பினர் கூறுகையில், ‛ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு துருக்கிஸ்தான் பகுதிக்குள் தாஜிகிஸ்தான், கம்போடியாவிலிருந்து வரும் உய்குர் முஸ்லிம்களை நாடு கடத்துகின்றனர்.

சீனாவுக்கு திரும்புபோது இவர்களை கடும் குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்துகின்றனர்; சீன கம்யூனிஸ்ட் கட்சி, கடும் அராஜகங்களை இவர்கள் மீது ஏவி விடுகிறது,' எனக் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான 80 பக்க புகாரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 30 சீன அதிகாரிகளைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

80 பக்க புகாரில் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லுதல், பன்றி இறைச்சியை வற்புறுத்தி சாப்பிடச் சொல்லி இழிவுப்படுத்துதல், உய்குர் முஸ்லிம் பெண்கள் குழந்தை பெற முடியாதபடி கருத்தடை சாதனங்களை பொருத்துதல். சுமார் 5 லட்சம் உய்குர் முஸ்லிம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து அனாதை முகாம்களுக்கு அனுப்புதல் ஆகியவற்றோடு அங்கு குழந்தைகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் உள்ளதாக்கவும் அதை இணைத்துள்ளதாகவும் பிரிட்டன் வழக்கறிஞர் ராட்னி டிக்சன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இது மிகவும் முக்கியமான வழக்கு என்றும், ஏனெனில் நீண்ட காலமாக சீனாவை யாரும் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது, பொறுப்பாக்க முடியாது எனக் கருதி வரும் நிலையில் புகார்தாரர்கள், சித்ரவதை அனுபவித்தவர்களின் நேரடி சாட்சியங்களை இணைத்துள்ளனர் இவ்வாறு அவர் கூறினார். 

Similar News