நடிகர் சங்க தேர்தலில் ஆகஸ்ட் 5ம் தேதி இறுதி கட்ட முடிவு - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

நடிகர் சங்க தேர்தலில் ஆகஸ்ட் 5ம் தேதி இறுதி கட்ட முடிவு - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Update: 2020-07-21 12:33 GMT

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இதன் முடிவு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி புதிய தேர்தலை நடத்தி முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் என்பவரை நியமித்த நீதிமன்றம், 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலி மூலம் விசாரித்தது. அப்போது வாக்குப்பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கை நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

Similar News