அடுத்த 5 ஆண்டுகளில் நேரடியாவே 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம் - ரூ11.5 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தி!
அடுத்த 5 ஆண்டுகளில் நேரடியாவே 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம் - ரூ11.5 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உற்பத்தி!
மிகப் பெரும் அளவிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைத் திட்டமானது (பி.எல்.ஐ) 1 ஏப்ரல் 2020 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற இலக்குப் பிரிவுகளின் கீழ் வரும் சரக்குகளின் படிப்படியான விற்பனையில் (அடிப்படை ஆண்டின் மீது) 4% முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்குவதை பி.எல்.ஐ திட்டம் விரிவுபடுத்தியுள்ளது. அதாவது தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அடிப்படை ஆண்டைத் (நிதியாண்டு 2019-20) தொடர்ந்து 5 ஆண்டு காலகட்டத்திற்கு இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 31-7-2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகைகள் 1-8-2020 முதல் கிடைக்கும்.
பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் மொத்தமாக 22 நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. மொபைல் போன் (இன்வாய்ஸ் மதிப்பு ரூ15,000 மற்றும் அதற்கு மேல்) பிரிவின் கீழ் சர்வதேச மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களான சாம்சங், ஃபாக்ஸ்கான் ஹோன் ஹை, ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இதில் ஃபாக்ஸ்பான் ஹோன் ஹை, விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்களும் ஆப்பிள் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பவை ஆகும். சர்வதேச அளவில் மொபைல் போன் விற்பனையில் சுமார் 60% வருவாயை ஆப்பிள் (37%) மற்றும் சாம்சங் (22%) ஆகியவை ஒருங்கிணைந்து பெற்றுள்ளன. இந்தத் திட்டமானது நாட்டில் இவற்றின் உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் (உள்நாட்டு நிறுவனங்கள்) பிரிவின் கீழ் லாவா, டிக்சான் டெக்னாலஜிஸ், பாக்வதி (மைக்ரோமேக்ஸ்), பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ், சோஜோ உற்பத்திச் சேவைகள் மற்றும் ஆப்டியமஸ் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி மொபைல் போன் உற்பத்தியில் தேசிய சாம்பியன் நிறுவனங்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட மின்னணு உதிரிப்பாகங்கள் பிரிவின் கீழ் ஏடி& எஸ், அக்சன்ட் சர்க்கியூட், விசிகோன், வால்சின், சகஸ்ரா, விட்டஸ்கோ, நியோலிங்க் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.